செய்திகள்
மரணம்

குட்டையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2020-12-25 22:05 IST   |   Update On 2020-12-25 22:05:00 IST
பொதியம்பட்டி பகுதியில் குட்டையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:

திருமயத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருமயம் அருகே உள்ள பொதியம்பட்டி பகுதியில் உள்ள குட்டையில் தேங்கி கிடந்த தண்ணீரில் கால் கழுவ சென்றார். அப்போது அவர் தவறி குட்டைக்குள் விழுந்தார். இதை யாரும் கவனிக்காததால் அவர் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News