செய்திகள்
கைது

சிவகாசி அருகே மது, புகையிலை விற்ற 6 பேர் கைது

Published On 2020-12-24 04:32 IST   |   Update On 2020-12-24 04:32:00 IST
சிவகாசி அருகே அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசார் 6 பேரை கைது செய்தனர்.
சிவகாசி:

சிவகாசி உட்கோட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் தடுக்க முடியாமல் போகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர்.

இதில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக குமார் (வயது 47), முனீஸ்வரன் (29), சங்கர் (30) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக பாலகிருஷ்ணன் (74), வேல்முருகன் (43), சரவணன் (34) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Similar News