செய்திகள்
விபத்து பலி

சாத்தூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

Published On 2020-12-23 15:11 IST   |   Update On 2020-12-23 15:11:00 IST
சாத்தூர் அருகே லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சாத்தூர் அருகே இருக்கன்குடி நார்காபுரத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் முருகசெல்வம் (வயது 20). இவர் தனது தங்கை ஜோதிகாவுடன் (16) இரு சக்கர வாகனத்தில் நேற்று சிவகாசி தேவராஜ் நகருக்கு வந்து கொண்டிருந்தார். பழைய விருதுநகர் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகசெல்வம் லாரி சக்கரத்தில் சிக்கி தனது தங்கை கண் முன்னே பரிதாபமாக இறந்தார். போலீசார் விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டி வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா நத்தம்பட்டியை சேர்ந்த பாஸ்கர் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

Similar News