செய்திகள்
விஷம் குடித்துவிட்டு விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த புதுப்பெண்
கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருமணமான 28 நாளில் விஷம் குடித்துவிட்டு விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த புதுப்பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 23). இவர் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த தனது உறவினர் வைரசீமான் என்பவரை காதலித்து கடந்த 28 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். வைர சீமான் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணமான மறுநாளே புதுப்பெண் மகேஸ்வரியை விருதுநகர் லட்சுமி நகரில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி தனது கணவர் வைரசீமானை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லாமல் போய்விட்டது.
கணவரது உறவினர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் மனு கொடுத்தார். ஆனால் போலீசார் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மகேஸ்வரி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்து அங்கு வந்தார்.
கலெக்டர் அலுவலக வாயிலில் வைத்து விஷம் குடித்துவிட்டு மகேஸ்வரி மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அங்கு நுழைவு வாயிலில் இருந்த போலீசார் அவரை விசாரித்தபோது தான் விஷமருந்தி விட்டதாக தெரிவித்ததுடன், மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் மகேஸ்வரியை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மகேஸ்வரி மனு மீது விசாரணை நடத்த அவரது கணவர் வைரசீமானை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் செயல்படாத நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவரது உறவினர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டதாகவும் இதனை தொடர்ந்து மேல் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட போலீஸ் நிர்வாகம் மகேஸ்வரியின் புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 23). இவர் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த தனது உறவினர் வைரசீமான் என்பவரை காதலித்து கடந்த 28 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். வைர சீமான் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணமான மறுநாளே புதுப்பெண் மகேஸ்வரியை விருதுநகர் லட்சுமி நகரில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி தனது கணவர் வைரசீமானை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலனில்லாமல் போய்விட்டது.
கணவரது உறவினர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் மனு கொடுத்தார். ஆனால் போலீசார் புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மகேஸ்வரி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்து அங்கு வந்தார்.
கலெக்டர் அலுவலக வாயிலில் வைத்து விஷம் குடித்துவிட்டு மகேஸ்வரி மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அங்கு நுழைவு வாயிலில் இருந்த போலீசார் அவரை விசாரித்தபோது தான் விஷமருந்தி விட்டதாக தெரிவித்ததுடன், மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் மகேஸ்வரியை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மகேஸ்வரி மனு மீது விசாரணை நடத்த அவரது கணவர் வைரசீமானை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் செயல்படாத நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவரது உறவினர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டதாகவும் இதனை தொடர்ந்து மேல் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாவட்ட போலீஸ் நிர்வாகம் மகேஸ்வரியின் புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.