செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தல்

75 மூடை ரேஷன் அரிசி வேனில் கடத்தல் - டிரைவர் கைது

Published On 2020-12-23 02:44 GMT   |   Update On 2020-12-23 02:44 GMT
வேனில் ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில் 75 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
சாத்தூர்:

விருதுநகர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் மற்றும் போலீசாருக்கு சாத்தூர் வழியாக வேனில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் முத்தால்நாயக்கன்பட்டியில் இருந்து திருவேங்கடம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு வேனை மடக்கினார்கள்.

அந்த வேனில் சோதனை செய்த போது அதில் 75 மூடை ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வேனை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் மகாதேவர்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சத்தியமூர்த்தியை (வயது 37) கைது செய்தனர். அந்த வேனில் இருந்த 75 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News