செய்திகள்
சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள குக்கலப்பள்ளியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் பார்த்த போது மோட்டார்சைக்கிள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.