செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி போலீசார், கொம்மேப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த உத்தனப்பள்ளி பங்களா தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 40), இருதாளம் மாதேஷ் (29), கொம்மேபாளையம் மஞ்சுநாத் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.