செய்திகள்
தற்கொலை

ஓசூர் அருகே மூதாட்டி தற்கொலை

Published On 2020-12-22 09:24 IST   |   Update On 2020-12-22 09:24:00 IST
ஓசூர் அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் வசந்த் நகர் காளியம்மன் கோவில் அருகில் 60 முதல் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அழுகிய நிலையில் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்து அட்கோ போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தூக்குப்போட்டு தற்கொலை செய்த மூதாட்டி யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News