செய்திகள்
கமல்ஹாசன்

சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார்- கமல்ஹாசன் பேச்சு

Published On 2020-12-20 20:27 IST   |   Update On 2020-12-20 20:27:00 IST
தமிழக சட்டப் பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
காஞ்சிபுரம்: 

நடிகர் கமல்ஹாசன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூறாவளிப் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் கூறியபோது ‘சட்டப்பேரவையில் நிச்சயம் ஒரு மீனவர் இருப்பார் என்று உறுதி அளித்தார். மேலும் உப்பை சுவாசித்த மீனவர்களிடம் நேர்மை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்று கமல்ஹாசன் கூறியது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.

மேலும் இதுவரை மீனவர் ஒருவர் சட்டப்பேரவையில் இருப்பார் என்று எந்த அரசியல்வாதியும் கூறாத நிலையில் அதை கமலஹாசன் கூறியது புதுமையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று முதல் கமல்ஹாசன் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News