செய்திகள்
கைது

ஓடும் பஸ்சில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

Published On 2020-12-20 10:21 GMT   |   Update On 2020-12-20 10:21 GMT
ஈரோட்டில் ஓடும் பஸ்சில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை சக பயணிகள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஈரோடு:

சென்னை பெரம்பூர் பழனியாண்டவர் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் சொந்த வேலை காரணமாக ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் வெங்கடேஷ் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். இந்த பஸ் அகில் மேடு வீதி பகுதியில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் வெங்கடேசின் மேல் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார். 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், “திருடன் திருடன்” என கூச்சலிட்டார். உடனே சக பயணிகள் துரத்திச் சென்று அவரை மடக்கிப்பிடித்து ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது (30) என்பது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக் முகமதுவை கைது செய்தனர்.
Tags:    

Similar News