செய்திகள்
யானைகள் கூட்டம் கூட்டமாக குளித்து மகிழ்ந்த காட்சி.

பவானிசாகர் அணையில் குளித்து மகிழ்ந்த யானை கூட்டம்

Published On 2020-12-19 07:27 GMT   |   Update On 2020-12-19 07:27 GMT
பவானிசாகர் அணையின் ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் மாலை வேளையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து குளித்து விட்டு செல்கின்றன.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் பவானி சாகர் வனச்சரகத்தில் உள்ள யானைகள் தினமும் பவானிசாகர் அணையின் ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் மாலை வேளையில் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து குளித்து விட்டு செல்கின்றன.

நவம்பர், டிசம்பர், ஜனவரி இந்த மூன்று மாதம் யானைகளின் இனப்பெருக்க மாதம் என்பதால் முதுமலை, கர்நாடகா, ஓசூர் ஆகிய வனப் பகுதிகளில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் இடம்பெயர்ந்து தெங்குமரஹாடா மற்றும் பவானிசாகர் வனப்பகுதிக்கு வந்து சேரும்.

இதனால் இந்த 3 மாதங்களில் யானைகள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படும். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றன. எனவே யானைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம், ஒற்றை யானையிடம் மிகவும் கவனமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News