செய்திகள்
கோப்புபடம்

மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி கட்டிட தொழிலாளி பலி

Published On 2020-12-18 20:07 IST   |   Update On 2020-12-18 20:07:00 IST
மத்தூர் அருகே மின்கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

மத்தூரை அடுத்த சிவம்பட்டியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு பிரபு மோட்டார்சைக்கிளில் மத்தூரில் இருந்து போச்சம்பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது போச்சம்பள்ளி சமத்துவபுரம் அருகே வந்தபோது சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பிரபு ஓட்டிசென்ற மோட்டார்சைக்கிள் மோதியது. 

இதில் தலையில் அடிபட்டு பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News