செய்திகள்
கோப்புபடம்

ஊத்தங்கரை அருகே இளம்பெண் கடத்தல் - ஒடிசா வாலிபர் மீது புகார்

Published On 2020-12-18 14:33 GMT   |   Update On 2020-12-18 14:33 GMT
ஊத்தங்கரை அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒடிசா வாலிபர் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை தர்மராஜா நகரை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி சிங்காரப்பேட்டையில் இருந்த இளம்பெண் மாயமானார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

புகாரில், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச தரணி சுனா (24) என்ற வாலிபர் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News