செய்திகள்
கோப்பு படம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 430 பேர் பலி

Published On 2020-12-13 14:48 GMT   |   Update On 2020-12-13 14:48 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 27 ஆயிரத்து 463 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 430 பேர் உயிரிழந்துள்ளனர். 224 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 47 ஆயிரத்து 413 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 730 பேர் உயிரிழந்துள்ளனர். 504 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 72 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 41 ஆயிரத்து 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 ஆயிரத்து 600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 445 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 664 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
Tags:    

Similar News