செய்திகள்
திருமானூரில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
அரியலூர் மாவட்டம் திருமானூரில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலந்துறையார் கட்டளை கிராமத்தை சேர்ந்த பிரபுவின் மனைவி மகரஜோதி(வயது 25). இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மகரஜோதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார்.
இதையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலந்துறையார் கட்டளை கிராமத்தை சேர்ந்த பிரபுவின் மனைவி மகரஜோதி(வயது 25). இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மகரஜோதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார்.
இதையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.