செய்திகள்
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் பேடரப்பள்ளி முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). கார் மெக்கானிக். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து சதீஷ் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.