செய்திகள்
சூளகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சூளகிரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:
சூளகிரி அருகே உள்ள பீரேபாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 25). மளிகை கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கடன் பிரச்சினை காரணாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.