செய்திகள்
ஊத்தங்கரை அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை
ஊத்தங்கரை அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள பேயனூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மனைவி சத்தியா (வயது 30). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்த சத்தியா விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
அவரை குடும்பத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்தியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.