செய்திகள்
தங்கும் விடுதியில் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி அருகே தங்கும் விடுதியில் ஜவுளி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளி பஞ்சூர் கரியசெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 49). ஜவுளி வியாபாரி. இவருக்கும், இவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் சரவணன் கடந்த 2 மாதங்களாக கிருஷ்ணகிரியில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.