செய்திகள்
கோப்புபடம்

பர்கூர் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Published On 2020-12-06 19:22 IST   |   Update On 2020-12-06 19:22:00 IST
பர்கூர் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

பர்கூர் போலீசார் ஜெகதேவி சாலையில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற விநாயகமூர்த்தி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

இதேபோல் வரட்டனப்பள்ளியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விறற வெங்கடேசன் (50), பாரூர் அருகே மஞ்சமேட்டில் கடையில் புகையிலை பொருடகள் விற்ற மூர்த்தி (45) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 3 கடைகளில் இருந்தும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News