செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீசார் போகசந்திரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த தாசப்பா (வயது 68) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தியபோது கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தாசப்பாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.