செய்திகள்
2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் ஓசூரில் நடைபெற்றது.

ஓசூரில் காணொலி காட்சி மூலம் “தமிழகம் மீட்போம்” பொதுக்கூட்டம்

Published On 2020-12-05 14:23 GMT   |   Update On 2020-12-05 14:23 GMT
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், “தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் ஓசூரில் நடந்தது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், “தமிழகம் மீட்போம் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் ஓசூரில் நடந்தது. இதில், காணொலி காட்சி மூலம் சென்னையில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். 

முன்னதாக, கட்சியின் மூத்த நிர்வாகிகள் 250 பேருக்கு பொன்னாடை அணிவித்து, பொற்கிழி வழங்கப்பட்டது. இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, ஓசூர் மாநகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா எம்.எல்.ஏ., முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாறன், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, மாநகர துணை செயலாளர் திம்மராஜ், பொருளாளர் சென்னீரப்பா, தொழில் அதிபர் ஆனந்தய்யா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் நன்றி கூறினார்.
Tags:    

Similar News