செய்திகள்
மத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு
மத்தூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கவுண்டனூரில் சங்கருக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. இவர் விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் சங்கரின் தாயார் ஒரு வீட்டை பூட்டிவிட்டு, அதன் அருகே உள்ள மற்றொரு வீட்டில் தூங்க சென்றார்.
அப்போது வீட்டு கதவின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.7 லட்சத்தை திருடி சென்றனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கர், மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதே போல் சங்கர் வீட்டின் அருகே வசிக்கும் கட்டிட மேஸ்திரி முருகன் என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 2 பவுன் நகைகளையும், மாது என்பவருடைய வீட்டில் ரூ.6 ஆயிரம் உண்டியல் பணம் ஆகியவற்றையும் திருடி சென்றனர். இதுகுறித்து அவர்கள் மத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மத்தூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கவுண்டனூரில் சங்கருக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. இவர் விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் சங்கரின் தாயார் ஒரு வீட்டை பூட்டிவிட்டு, அதன் அருகே உள்ள மற்றொரு வீட்டில் தூங்க சென்றார்.
அப்போது வீட்டு கதவின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.7 லட்சத்தை திருடி சென்றனர். இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கர், மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து வீட்டு கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதே போல் சங்கர் வீட்டின் அருகே வசிக்கும் கட்டிட மேஸ்திரி முருகன் என்பவருடைய வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 2 பவுன் நகைகளையும், மாது என்பவருடைய வீட்டில் ரூ.6 ஆயிரம் உண்டியல் பணம் ஆகியவற்றையும் திருடி சென்றனர். இதுகுறித்து அவர்கள் மத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மத்தூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.