செய்திகள்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாயில் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (சனிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை காலை 10 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாயில் முன்பாக எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக நடத்திட வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட தி.மு.க.செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்த 10 தினங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (சனிக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பில் நாளை காலை 10 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாயில் முன்பாக எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக நடத்திட வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.