செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-12-04 11:55 GMT   |   Update On 2020-12-04 11:55 GMT
ரூ.14,500 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கையில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ இடங்களை 100 லிருந்து 150ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.14,500 கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும்.

தமிழக சட்டமன்றத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவப்படம் வைக்கப்படும். மேலும் மோகன் குமாரமங்கலத்தின் முழு உருவப்படம் சட்டசபையில் வைக்கப்படும்.

7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News