செய்திகள்
கோப்புபடம்

விருத்தாசலம் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

Published On 2020-12-03 10:26 GMT   |   Update On 2020-12-03 10:26 GMT
விருத்தாசலம் அருகே தாய் இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த சின்ன கண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் அரசன் (வயது 67). இவரது மனைவி பானுமதி (55). இவர்களுக்கு ஜோதிமுருகன் (35) என்கிற மகன் உள்ளார். 

இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த 27-ந்தேதி பானுமதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் ஜோதிமுருகன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அம்மா இறந்த துக்கம் தாங்காமல் நேற்று மாலை ஜோதிமுருகன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News