செய்திகள்
தற்கொலை

விருத்தாசலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2020-12-03 05:57 GMT   |   Update On 2020-12-03 05:57 GMT
விருத்தாசலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் வேல்முருகன் (வயது 37) விவசாயி. இவருக்கு உஷா என்கிற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஷா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் கார்கூடல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வேல்முருகன் உஷாவை நேரில் சந்தித்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு உஷா மறுத்து விட்டார்.

இதனால் மனமுடைந்த வேல்முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், வேல்முருகன் உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News