செய்திகள்
ராஜதுரை - பாம் ரவி - தடி அய்யனார்

புதுவை மத்திய சிறையில் கைதிகள் பயங்கர மோதல்- ரவுடி படுகாயம்

Published On 2020-12-03 01:57 GMT   |   Update On 2020-12-03 01:57 GMT
புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் கைதிகளிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ரவுடி படுகாயம் அடைந்தார்.
காலாப்பட்டு:

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் 250க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு உள்ள ரவுடிகள் செல்போன் மூலம் தங்கள் ஆதரவாளர்களை தொடர்பு கொண்டு வெளியில் குற்ற சம்பவங்களை நிகழ்த்துவது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவின் பேரில் போலீசார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கைதிகளின் அறையில் இருந்து 12 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே முக்கிய கைதிகள் 5 பேரை வேறு மாநில சிறைக்கு மாற்ற கவர்னர் உத்தரவிட்டார்.

உத்திரவாகிணிபேட் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரவி என்கிற பாம்ரவி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். நேற்று முன்தினம் அவர் தனது அறையில் படுத் திருந்தார். அப்போது பிரபல ரவுடிகளான தடி அய்யனார், அஜித்குமார், தாடி அய்யனார் என்கிற ராஜதுரை ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர். அவர்கள் கையில் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகடுகளுடன் வந்து பாம் ரவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

பதிலுக்கு பாம் ரவியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாம் ரவி அவர்களிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட உடன் சிறை வார்டன்கள் அங்கு விரைந்து சென்று பாம் ரவியை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் சிறைத்துறை சூப்பிரண்டு கோபிநாத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறை வார்டன்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ் பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நேற்று மாஜிஸ்திரேட்டு அனுமதி பெற்று சிறையில் சென்று கைதிகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைக்குள் பாம் ரவியும், தடி அய்யனாரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்து சென்றுள்ளனர். இதனால் அவர்கள் 2 கோஷ்டிகளாக செயல்பட்டுள் ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த மோதல் சம்பவம் நடந்தது தெரிய வந்துள்ளது. ரவுடிகளான தடி அய்யனார் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளும், அஜித்குமார் மீது கொலை முயற்சி வழக்கும், தாடி அய்யனார் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
Tags:    

Similar News