செய்திகள்
கோப்புபடம்

கடலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

Published On 2020-12-01 15:25 GMT   |   Update On 2020-12-01 15:25 GMT
கடலூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று வண்டிப்பாளையம் வெள்ளிமோட்டான் தெரு, பாதிரிக்குப்பம் திடல் ஆகிய பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு புதுவண்டிப்பாளையம் கார்த்திகேயன் (வயது 48), கூத்தப்பாக்கம் வேலுநகர் பாஸ்கரன் (49) ஆகிய 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News