செய்திகள்
கோப்புபடம்

குறிஞ்சிப்பாடி அருகே பள்ளியில் தூக்குப்போட்டு காவலாளி தற்கொலை

Published On 2020-12-01 15:22 GMT   |   Update On 2020-12-01 15:22 GMT
குறிஞ்சிப்பாடி அருகே பள்ளியில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி:

குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 65). இவர் வேலவிநாயகர்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் தங்கி இருந்து இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகத்தின் மகன் ஆனந்தன் இறந்தார். 

இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சம்பவத்தன்று பள்ளிக்கூடத்தில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News