செய்திகள்
மனைவி இறந்த துக்கம்: தூக்குப்போட்டு மெக்கானிக் தற்கொலை
தேவகோட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:
தேவகோட்டை ஒத்தக்கடை 6-வது வார்டு பள்ளி எதிரே டி.வி. மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தவர் சிவா (வயது 42). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சிவா வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.இதற்கிடையே நேற்று காலை பக்கத்து கடைக்காரர் கடை பூட்டு திறந்து கிடப்பதை கண்டு வீட்டிற்கு தகவல் கொடுத்தார். குடும்பத்தினர் வந்து கதவைத் திறந்து பார்த்தபோது சிவா கடைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தேம்வகோட்டை நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.