செய்திகள்
கோப்புபடம்

சிங்காரப்பேட்டை, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் 2 பெண்கள் தற்கொலை

Published On 2020-11-29 14:53 GMT   |   Update On 2020-11-29 14:53 GMT
சிங்காரப்பேட்டை, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
ஊத்தங்கரை:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி உமாசங்கரி (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு வைஷ்ணவி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் உமாசங்கரிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது பெற்றோர் வீடான சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டஅள்ளி காமராஜர் நகருக்கு வந்து சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த உமாசங்கரி, விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உமாசங்கரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி கனகா(25). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினமும் அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த கனகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News