செய்திகள்
கலெக்டர் உமாமகேஸ்வரி

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 1-ந்தேதி காணொலி காட்சி மூலம் நடக்கிறது

Published On 2020-11-28 08:21 GMT   |   Update On 2020-11-28 08:21 GMT
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 1-ந் தேதி காலை 11 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 1-ந் தேதி காலை 11 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ளும் வகையில் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொலி காட்சி மூலம் இக்கூட்டத்தில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடையலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News