செய்திகள்
களம்பூர் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தல்: 2 பேர் கைது
போளூர் தாலுகா களம்பூர் அருகே பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆரணி:
போளூர் தாலுகா களம்பூர் பகுதியில் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15-ந் தேதி கடத்தி செல்லப்பட்டார். இது தொடர்பாக மாணவியின் தந்தை களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் கவியரசன் (வயது 26) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. கார் டிரைவர் பாபு, நாகராஜன் ஆகியோர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கடத்தப்பட்ட மாணவி, அவரை கடத்திய கவியரசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
போளூர் தாலுகா களம்பூர் பகுதியில் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 15-ந் தேதி கடத்தி செல்லப்பட்டார். இது தொடர்பாக மாணவியின் தந்தை களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வம்பலூர் கிராமத்தை சேர்ந்த மெக்கானிக் கவியரசன் (வயது 26) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. கார் டிரைவர் பாபு, நாகராஜன் ஆகியோர் கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கடத்தப்பட்ட மாணவி, அவரை கடத்திய கவியரசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.