செய்திகள்
அரிமளம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் மீது வழக்குப்பதிவு
அரிமளம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம் கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் (வயது 43) என்பவரை பிடித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.