செய்திகள்
கோப்புபடம்

திருபுவனை அருகே தனியார் நிறுவன காவலாளியை தாக்கி கொலை மிரட்டல்

Published On 2020-11-17 14:18 GMT   |   Update On 2020-11-17 14:18 GMT
திருபுவனை அருகே தனியார் நிறுவன காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருபுவனை:

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே குமாரக்குப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 52). இவர் திருபுவனை அருகே கலித்தீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவர் அந்த நிறுவனத்தின் வாயில் கதவை திறக்குமாறு சத்தம் போட்டார். உடனே தட்சணாமூர்த்தி கதவை திறந்து வெங்கடேசனிடம் விவரத்தை கேட்டார். அதற்கு அவர், உங்கள் முதலாளியை பார்க்கவேண்டும் என்று தெரிவித்தார். தீபாவளி விடுமுறை என்பதால் அவர் வரவில்லை என்று தட்சணாமூர்த்தி கூறினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் மற்றும் அவருடன் சென்றவரும் சேர்ந்து தட்சணாமூர்த்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்த தாக்குதல் குறித்து திருபுவனை போலீசில் தட்சணாமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் அவருடன் வந்தவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News