செய்திகள்
மரணம்

கரையாம்புத்தூரில் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2020-11-16 08:30 IST   |   Update On 2020-11-16 08:30:00 IST
கரையாம்புத்தூரில் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:

கரையாம்புத்தூர் சொர்ணாவூர் ரோடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 55) கூலித்தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். ஜெயபால் வழக்கமாக மதுகுடிக்க சென்றால் போதை அதிகமாகி மதுக்கடை அருகே படுத்து தூங்கி விடுவாராம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயபால் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை, அவரது மகன்கள் தேடிய நிலையில் ஜெயபால் அங்குள்ள பங்காரு வாய்க்கால் தண்ணீரில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து ஜெயபால் இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Similar News