செய்திகள்
விபத்து

கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த டிரைவர் உயிரிழப்பு

Published On 2020-11-15 10:32 GMT   |   Update On 2020-11-15 10:32 GMT
நாகை மாவட்டம் கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் கீழையூர் போலீஸ் சரகம் காரப்பிடாகை தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவருடைய மகன் நடராஜன் (வயது 40). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 11-ந் தேதி தனது வீட்டிலிருந்து வயலுக்கு மோட்டார் சைக்கிளில் கீழையூர் செல்லும் குறுக்கு சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். 

இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News