செய்திகள்
கைது

குன்னூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு- 3 பேர் சிக்கினர்

Published On 2020-11-13 17:17 IST   |   Update On 2020-11-13 17:17:00 IST
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மோட்டார் சைக்கிளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர், வெலிங்டன் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வந்தது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் சமீபத்தில் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியை சேர்ந்த குலாப் ஜான் என்பவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு தொடர்பாக சிலரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெலிங்டனை சேர்ந்த ஜாபர்(வயது 27), குன்னூரை சேர்ந்த ரபீக் முகமது(36), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபுதாகீர்(30) ஆகிய 3 பேரும் சேர்ந்து குலாப் ஜானின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. மேலும் சில இடங்களில் அவர்கள் கைவரிசை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Similar News