செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து மின்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-13 03:05 GMT   |   Update On 2020-11-13 03:05 GMT
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது. மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
காரைக்கால்:

யூனியன் பிரதேசங்களில் மின்துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி மின் துறையினர் மின்துறை தனியார் மயமாக்கல் எதிர்ப்பு போராட்டக்குழு அமைத்துள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் மயில்வாகனம் தலைமையில் மின்துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன்படி நேற்று காரைக்கால் மாவட்ட ரெயில் நிலையம் அருகே யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்கக் கூடாது. மத்திய அரசின் முடிவுக்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News