செய்திகள்
புதுச்சேரி அருகே தனித்தனி சம்பவம் - 2 இளம்பெண்கள் மாயம்
புதுச்சேரி அருகே வெவ்வேறு இடங்களில் 2 இளம்பெண்கள் மாயம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பேட் பூஞ்சோலை வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது50). இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு சுபலட்சுமி (20) என்ற மகளும், பிரதீபன் என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சுபலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வில்லியனூர் அகரம் புதுநகரை சேர்ந்த முருகன் (வயது47). டெய்லர். இவரது மனைவி கல்யாணி. இவர்களுக்கு அருண்குமார் (23) என்ற மகளும், பவித்ரா (20) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பவித்ரா வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை பல இடங்களில் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருபுவனை போலீசில் முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடி வருகிறார்கள்.