செய்திகள்
கோப்புபடம்

கூடலூர் அருகே மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-10 16:39 IST   |   Update On 2020-11-10 16:39:00 IST
கூடலூர் அருகே 20 சதவீத போனஸ் கேட்டு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்:

தமிழக அரசு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளதை கண்டித்தும், கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினர் மசினகுடியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News