செய்திகள்
பிரேமலதா

பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும்- பிரேமலதா

Published On 2020-11-09 17:00 IST   |   Update On 2020-11-09 17:00:00 IST
கொரோனா இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
புதுவை:

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் கொரோனா தொற்று இருப்பதால் பள்ளி, கல்லூரிகளை 3 மாதத்திற்கு பிறகே திறக்க வேண்டும். தமிழக பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை’ முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கான நோக்கம் என்ன? கறுப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார். 

தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Similar News