செய்திகள்
தற்கொலை

தேங்காய்திட்டில் சமையல் தொழிலாளி தற்கொலை

Published On 2020-11-09 09:12 IST   |   Update On 2020-11-09 09:12:00 IST
தேங்காய்திட்டில் சமையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி தேங்காய்திட்டு பால்நிலைய வீதியை சேர்ந்தவர் ஆழ்வார்(வயது 67). சமையல் தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கம் உடையவர். நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அவர் தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து விரக்தி அடைந்த ஆழ்வார் வீட்டின் மாடியில் உள்ள அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News