செய்திகள்
நாராயணசாமி

எந்த குற்ற வழக்குகள் என்றாலும் 24 மணி நேரத்தில் கைது- நாராயணசாமி பேச்சு

Published On 2020-11-07 17:05 IST   |   Update On 2020-11-07 17:05:00 IST
எந்த குற்ற வழக்குகள் இருந்தாலும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி காவல்துறை உயரதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்- அமைச்சர் நாராயணசாமி , தீபாவளி நேரத்தில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எந்த குற்ற வழக்குகள் இருந்தாலும் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

கடைகளில் மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டுவதாக புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Similar News