செய்திகள்
தற்கொலை

கிருமாம்பாக்கம் அருகே மளிகை கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-11-04 17:28 IST   |   Update On 2020-11-04 17:28:00 IST
கிருமாம்பாக்கம் அருகே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்த மளிகை கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:

கிருமாம்பாக்கத்தை அடுத்த காட்டுக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற பாலன் (வயது 61). மளிகை கடைக்காரர். இவரது மனைவி விமலா (60). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

பாலனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அடிக்கடி நெஞ்சுவலி, வயிற்று வலி காரணமாகவும் அவர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News