செய்திகள்
மானாமதுரையில் உள்ள நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி ஆய்வு
மானாமதுரையில் உள்ள நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி ஆய்வு செய்தார்.
மானாமதுரை:
மானாமதுரை சப்-கோர்ட்டு, முன்சீப் கோர்ட்டு, ஜே.எம். கோர்ட்டு ஆகிய நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஹி அவர்கள் ஆய்வு செய்தார். முன்னதாக, சப்-கோர்ட்டுக்கு வருகை தந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாஹியை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கார்த்திகேயன், மானாமதுரை சார்பு நீதிபதி அன்வர் சதாத், நீதித்துறை நடுவர் முத்து இசக்கி, சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் ராஜகோபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் நீதிமன்றங்களை பார்வையிட்டு தலைமை நீதிபதி ஆய்வு செய்தார். அவர் மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த புதிய கட்டிடத்தினை செயல்படுத்துமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மானாமதுரை வக்கீல் சங்கம் சார்பில் தலைவர் முத்துக்குமார், முன்னாள் செயலாளர் குரு.முருகானந்தம், மூத்த வக்கீல்கள் ஆதிமூலம், முத்துராமலிங்கம், ஜெயராமன், அரசு வக்கீல்கள் ஊர்காவலன், லிங்கேஸ்வரன், ராஜாங்கம், சிவகாமி, அனுசூர்யா, அழகர்சாமி ஆகியோர் தலைமை நீதிபதிக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டிடத்தை கட்டித்தர கோரிக்கை மனு அளித்தனர்.