செய்திகள்
கோப்புப்படம்

காலியாக உள்ள 60 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்

Published On 2020-10-31 11:37 IST   |   Update On 2020-10-31 11:37:00 IST
சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர் பணி காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த்துறையில் காலியாக உள்ள 60 கிராம உதவியாளர் பணியிடத்திற்கு ஆட்கள் இன சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 5-ம் வகுப்பு வரைபடித்திருக்க வேண்டும் 1.7.2020 அன்று பொதுப்பிரிவினர் 30 வயதுக்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர் 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பம் செய்பவர்கள் அந்தந்த கிராமத்தில் அல்லது தாலுகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

விருப்பம் உடையவர்கள் தங்கள் பகுதி தாலுகா அலுவலகங்களில் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பத்தினை வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதிக்குள் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Similar News