செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

கோவையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 9 பேர் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு

Published On 2020-10-27 22:53 GMT   |   Update On 2020-10-27 22:53 GMT
தி.மு.க. தலைவர் ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:

கோவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஆர்ப்பாட்டத்தின்போது அத்துமீறி மேடை அமைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக உதயநிதி உள்ளிட்ட 9 பேர் மீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News