செய்திகள்
சாலை சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்.

சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2020-10-27 04:49 GMT   |   Update On 2020-10-27 04:49 GMT
உடையார்பாளையம்- கழுமங்கலம் செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் -கழுமங்கலம் செல்லும் சாலை அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதி பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை தற்போது சேதமடைந்து, குண்டும் குழியுமான நிலையில் உள்ளது.

இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கான மூலப்பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு செல்லும்போது மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மழை காலங்களில் சாலையில் உள்ள குழியில் மழைநீர் சூழ்ந்து பள்ளம் இருப்பது தெரியாமல் போய்விடுகிறது. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் மேடு, பள்ளம் தெரியாமல் வாகனங்களில் செல்வதால் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்து செல்கின்றனர்.

பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் குண்டும், குழியுமான சாலையில் செல்லும்போது சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News